( வி.ரி.சகாதேவராஜா)

காரைதீவு விஷ்ணு வித்தியாலயத்தின் பழைய மாணவரான சிவானந்தன்(கனடா) தன்தந்தையாரின் மார்க்கண்டு(முதலாளி) சமூக அறக்கட்டளையின் அனுசரணையுடன் குறித்த பாடசாலைக்கு அலுவலக உபகரணங்கள் மற்றும் அதிபர் ஆசிரியர்களுக்கான பரிசில்கள் வழங்கினார்.

இம் முன்னுதாரணமான நிகழ்வு  அண்மையில்  வித்தியாலய அதிபர் திருமதி.கலைவாணி தம்பிராசா தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக திருமதி இலட்சுமிஅம்மாள் மார்க்கண்டு மற்றும் சிறப்பு அதிதிகளாக  மார்க்கண்டு சிதம்பரநாதன்(விவசாய பெரும்பாக உத்தியோகத்தர்),  க.தட்சணாமூர்த்தி(நில அளவை அத்தியட்சகர்), மா.வித்தியானந்தன்(அறக்கட்டளை இணைப்பாளர்) மற்றும் ஆசிரியர்கள்குடும்ப உறுப்பினர்கள் மாணவர்களும் சிறப்பித்தார்கள்.

இவ்வமைப்பானது கடந்த கொரோனா காலங்களில் காரைதீவு,அட்டப்பள்ளம்,திராய்க்கேணி போன்ற கிராமங்களில் வாழ்வாதாரத்தை இழந்த குடும்ப உறவுகளுக்கு உணவுப்பொதிகள் மற்றும் உதவிகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு விஷ்ணு வித்தியாலயத்தின் பழைய மாணவரான சிவானந்தன் கனடாவில் சுவாமி விபுலாநந்த மன்றம் உள்ளிட்ட பல ஊர்சார்ந்த அமைப்புகளில் பிரதான பாகமெடுத்து சமுகசேவையாற்றிவருகிறார்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours