(காரைதீவு   சகா)

வரலாற்றுப் பிரசித்தி பெற்ற மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் கடந்த இருவருடங்களுக்குப்பிறகு மஹாசிவராத்திரி விரதம் 4சாமப்பூஜைகளுடன் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டத்தின் பல பாகங்களிலுமிருந்தும் பக்தர்கள் வருகை தந்திருந்தனர். ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் தலைமையிலான புதிய நிருவாகம் ஆலயத்தை மிக்கொளியால் அலங்கரித்திருந்தது.
ஆலய அர்ச்சகர் ரி.கணேசன் மகாசிவராத்திரி விசேட பூஜையை நடாத்தினார்.

இரண்டதம் சாமப்பூஜை நிறைவில் ஆலயத்தலைவர் கி.ஜெயசிறில் ஆலய கும்பாபிசேகம் தொடர்பாக விளக்கவுரை நிகழ்த்திய அதேவேளை சிவராத்திரி தொடர்பான சிறப்புரையை ஆலய ஆலோசகர் வி.ரி.சகாதேவராஜா நிகழ்த்தினார்.

தினமும் யானை வரும் அப்பிரதேசத்தில் பக்தர்கள் விடியவிடிய கண்விழித்து விரதத்தை பூர்த்திசெய்தனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours