நூருல் ஹுதா உமர்
வாசிப்பை ஊக்கப்படுத்தும் நோக்கில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலகத்தில் இறுதியாண்டு மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட புத்தக கண்காட்சி மற்றும் பிரபல அறிஞர்களின் நூல்கள் பற்றிய ஆய்வு நிகழ்வொன்று இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக நூலக மண்டபத்தில் நூலகர் எம்.எம் ரிபாயுடீன் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
பல்கலைக்கழக நூலக கேட்போர் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் கலந்துகொண்டதுடன் கலை,கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், நூலக உயர் அதிகாரிகள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours