சர்வதேச மகளீர் தினத்தினை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகம் மற்றும் புதுக்குடியிருப்பு ஆயுள்வேத வைத்தியசாலை இணைந்து நடாத்திய  "பாரம்பரிய உணவு பிரயோகமும் தொற்றாநோயும்" எனும் தலைப்பிலான விழிப்புணர்வு கலந்துரையாடலொன்று தாழங்குடா சமூக பராமரிப்பு நிலையத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வானது மண்முனைப்பற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் சி.திவாகரன் அவர்களது தலைமையில் ஆரம்பமானதுடன் சிறப்பு அதிதிகளாக ஆயுள்வேத வைத்தியசாலையின் பெண் வைத்தியர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதில் "பாரம்பரிய உணவு பிரயோகமும் தொற்றாநோயும்" எனும் தலைப்பில் விழிப்புணர்வு கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் நாளாந்த உணவு முறைகள் தொடர்பான விளக்கமும் வழங்கப்பட்டது.

மேலும் குருதியமுக்க பரிசோதனை மற்றும் உடல்நிறை அளவிடல் போன்ற விடயங்கள் நடைபெற்றதுடன் இந்நிகழ்வில் 40 இற்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours