படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் டி.சிவராமின் நினைவு தினத்தினை முன்னிட்டு நாளை வெள்ளிக்கிழமை 29ஆம் திகதி மட்டக்களப்பில் நினைவேந்தல் நிகழ்வும் கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.30மணியளவில் மட்டக்களப்பு நகரில் உள்ள படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டு அதனை தொடர்ந்து கவன ஈர்ப்பு போராட்டமும் முன்னெடுக்கப்படவுள்ளது.

இலங்கையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டியும் நாட்டில் இடம்பெற்றுவரும் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்குமுறையினை கண்டித்தும் தமிழ் மக்களின் உரிமையினை அங்கிகரிக்ககோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 

இந்த நினைவேந்தல் நிகழ்வில் அனைத்து ஊடகவியலாளர்களையும்,பொது அமைப்புகளையும் அரசியல்வாதிகளையும் மனித உரிமை செயற்பாட்டாளர்களையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் மட்டு.ஊடக அமையம் என்பன சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours