பல பொருட்களுக்கான இறக்குமதி தடை தளர்த்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த இறக்குமதி தடை நேற்று (23.11.2022) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்கமைய ஆடைகள் மற்றும் ஆடை அணிகலன்கள்,மாபிள்ஸ், மட்பாண்டங்கள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள், குளிரூட்டிகள், உறைவிப்பான்கள் (Freezers)மற்றும் சலவை இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான இறக்குமதித் தடை தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post A Comment:
0 comments so far,add yours