(எஸ்.அஷ்ரப்கான்)

அக்கரைப்பற்று வலய ஒலுவில் அல்-ஹம்றா மகா வித்தியாலயத்தில் "இங்கிலீஸ் பெஸ்டிவல்" நிகழ்வு பாடசாலை அதிபர் அஷ்-ஷெய்க் யு.கே.அப்துர் ரஹீம் தலைமையில் நடைபெற்றது. 

பாடசாலையின் ஆங்கில பாட இணைப்பாளர் ஏ.ஆர்.முஹம்மட் நிஹால் இன் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஆங்கில பாட பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். நெளபர்டீன் கலந்து கொண்டு மாணவர்கள் ஏற்பாடு செய்த "இங்கிலீஸ்  பூட் பெஸ்டிவல் உடன் கண்காட்சியையும்  திறந்துவைத்து,
மாணவர்களால்  தயாரிக்கப்பட்ட இலங்கை, இந்தியா மற்றும் மலேசியா சார் பல்வேறு வகையான உணவுகளையும் 
பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாணவர்களின் ஆங்கில கலை நிகழ்ச்சிகளும்  அரங்கேற்றப்பட்டது.

இந்நிகழ்வில், பாடசாலையின் பிரதி, உதவி அதிபர்கள்,  ஆசிரியர்கள், மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours