( வி.ரி.சகாதேவராஜா)

 சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியின் அதிபர் நாசீர் அலி வெளிநாடு சென்றிருப்பதால் பதில் அதிபராக திருமதி நஜீபா ஏ ரஹீம் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிபர் நாசீர் அலி வெளிநாடு செல்லும் பொருட்டு பாடசாலையில் இருந்து சம்பளமற்ற விடுமுறை பெற்று சென்றுள்ளார். 

அதனையடுத்து பாடசாலையினா பிரதி அதிபரான திருமதி .நஜீபா .ஏ.றஹீம் பதில் அதிபராக க் கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

அதனைத்தொடர்ந்து  பாடசாலை முகாமைத்துவக் குழு கூட்டத்தை அவர் நடாத்தினார்.

இதேவேளை  பாடசாலையின் நிர்வாகத்திற்கு பொறுப்பான பிரதி அதிபராக  சாஹுல் ஹமீட் முகாமைத்துவ குழு முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றார். 


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours