(வி.ரி.சகாதேவராஜா)

எதிர்வரும் ஊராட்சி மன்ற தேர்தலில் காரைதீவு பிரதேச சபை க்கு ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி கட்சி சார்பில் 14 சமூக செயற்பாட்டாளர்கள் குத்துவிளக்கு சின்னத்தில் களமிறங்கி உள்ளனர்.

 வேட்பாளர் குழுவில் 
பிரதேச சபை உறுப்பினர் சபாபதி நேசராசா ,முன்னாள் உறுப்பினர் முத்துலிங்கம் காண்டீபன் ,புளொட் மாவட்ட அமைப்பாளர் பரமலிங்கம் ரவிச்சந்திரன், மார்க்கண்டு கேதாரேஸ்வரி, இளையதம்பி பார்வதி, கணபதிப்பிள்ளை கௌரிகாந்தன், கதிரேசபிள்ளை வடிவேல்
  ஆகியோர் முதல் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்கள்.

 இரண்டாவது பட்டியலில் வி.பிரதாபன்,யு.மகேந்திரன், எஸ்.நிசாந்தினி , கே.கருணாநிதி,கே. ஞானேஸ்வரன்,வி. மகேஸ்வரி , எஸ்.தயாபரன்  ஆகியோர் இடம் பெறுகின்றார்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours