(வி.ரி.சகாதேவராஜா)

 இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் இம்முறை நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக களம் இறங்கியுள்ளார்.

 இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் காரைதீவு பிரதேச சபைக்கு போட்டியிடவுள்ள  வேட்பாளர்கள் தெரிவு இடம்பெற்று முடிந்திருக்கின்றது.

 இந்த நிலையில்  அவரது வட்டாரத்தில் அவர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது . மக்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க அவர் மீண்டும் களமிறங்கினார்.


அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேச உள்ளுராட்சி மன்றங்களிலே காரைதீவு பிரதேச சபை மாத்திரமே தமிழரசுக் கட்சி வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours