( எம்.என்.எம்.அப்ராஸ்)
கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் பாடசாலை அதிபர் எம். ஐ.அப்துல் ரஸாக் அவர்களின் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கும்
போதைவஸ்து தடுப்பு குழுவிற்கான விசேட விழிப்புணர்வை ஏற்படுத்தும் கூட்டம் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சின் பக்கீர், பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிட் ஆகியோரின் பங்குபற்றுதலுடன்பாடசாலையின் அதிபர் காரியாலயத்தில் நடைபெற்றது.
இதில் பிரதானமாக பாடசாலை மாணவர்கள் மத்தியிலும்,பாடசாலைச் சூழலிலும் சமூகத்திலும் காணப்படக் கூடிய போதைப்பொருள் பாவனை தொடர்பாகவும் அவற்றை தடுப்பதற்காக மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours