(விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா)
தமிழரின் பண்பாடு பாரம்பரியம் அடையாளம் போன்றவற்றை அடுத்த சந்ததிக்கு கடத்த வேண்டிய பொறுப்பு அவர்கள் சார்ந்த பாடசாலைகளுக்கும் உள்ளது .
என்று கிழக்கில் புகழ் பூத்த கல்முனை பற்றிமா தேசிய கல்லூரியில் இடம்பெற்ற தைப்பொங்கல் தின விழாவில் உரையாற்றிய கல்லூரி அதிபர் சகோ சந்தியாகு செபமாலை தெரிவித்தார்.
மேற்படி பாடசாலையின் தைப்பொங்கல் திருவிழா பாரம்பரிய முறைப்படி நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
முன்னதாக மாட்டு வண்டிலில் பொங்கலுக்கு உரிய பொருட்கள் அனைத்தும் பற்றிமா பெண்கள் பிரிவிலிருந்து ஊர்வலமாக விளக்கங்களுடன் வாழை தோரணங்களோடு ஆண்கள் பிரிவுக்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு புதுப்பானையில் புத்தரிசி கொண்டு பொங்கல் இடம் பெற்றது. அதிபர் சகோ.சந்தியா அவர்களுக்கு தலைப்பாகை கட்டி அங்கு பொங்கல் பானைக்கு பால் ஊற்றினார்கள் .சிறப்பு அதிதியாக பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் மின்சார சபை பொறியாளர் வி.ரி.சம்பந்தர் கலந்து சிறப்பித்தார்.
மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் மேடையேறின.
அங்கு அதிபர் சந்தியாகு மேலும் பேசுகையில்.
Post A Comment:
0 comments so far,add yours