(வி.ரி. சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அழகு கலைப்பயிற்சி நெறியினை நிறைவு செய்த யுவதிகளுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதிசேகரன் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜாஆகியோருடன் சமூக செயற்பாட்டாளர் வி.வாமதேவன் தென்கிழக்கு பழ்கலைக்கழக விரிவுரையாளரும் சமூக செயற்பாட்டாளருமான செல்வி..அனுசியா சேனாதிராஜா மற்றும் பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் வை.பிரபாகரன் மற்றும் அழகுக் கலை ஆசிரியர் திருமதி சுபாஜினி பிரபாகரன் மற்றும் பயிற்சி பெற்றவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




Post A Comment:
0 comments so far,add yours