(சுமன்)


எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேச சபையில் போட்டியிடுவதற்கான கட்டுப் பணத்தினை இன்றைய தினம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் செலுத்தியுள்ளது.

முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களினால் அமைக்கப்பட்ட புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியினர் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் காரைதீவு பிரதேச சபையில் சுயேட்சையாகக் களமிறங்கவுள்ளது.

இதற்கான கட்டுப் பணத்தினை இன்றைய தினம் அக்கட்சியின் முதன்மை வேட்பாளர் செல்வநாயகம் ரசிகரன் மற்றும் வேட்பாளர்களான சதாசிவம் நமசிவாயம், கந்தசாமி கோணேசமூர்த்தி ஆகியோர் செலுத்தியமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours