( எம்.என்.எம்.அப்ராஸ்)


ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின்(Samagi Wihidum Balaganaya)
திகாமடுல்ல மாவட்ட பணிப்பாளராக  றிஸ்கான் முகம்மட்,ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால்(15) நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

 களுத்துறையில் ஐக்கிய மக்கள் சக்தியின் சமகி வரிசைப்படுத்தல் படையின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹேஷா விதானகே தலைமையில் இடம்பெற்ற,சமகி வரிசைப்படுத்தல் படையின் மாவட்ட மாநாட்டில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும்,எதிர்க்கட்சித்தலைவரு மான சஜித் பிரேமதாசாவினால் இந் நியமனக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.

றிஸ்கான் முகம்மட் ஐக்கிய  மக்கள் சக்தி இளைஞர் அணியின் தேசிய செயற்குழு உறுப்பினராகவும்,
அம்பாறை மாவட்ட செயலாளராகவும்  உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours