(வி.ரி.சகாதேவராஜா)  

தேசிய ரீதியில் 2020 ஆம் ஆண்டிற்கான தேசிய உற்பத்தி திறன் விருது  இரண்டாம் இடம் பெற்றமையை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் நேற்று முன்தினம் கௌரவிக்கப்பட்டனர்.

 இந்நிகழ்வு வைத்தியசாலையின் பணிப்பாளர்  டாக்டர்.இரா. முரளீஸ்வரன் தலைமையில் நேற்று முன்தினம் (30) இடம்பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜே. மதன் , வைத்தியசாலை கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, தாதியபரிபாலகர்கள் திருமதி சுஜேந்திரன், திரு சசிதரன் ,நிர்வாக உத்தியோகத்தர் ரி. தேவஅருள் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours