(எஸ்.அஷ்ரப்கான் )

எமது நாட்டை சீரழித்த அரசியல்வாதிகளுக்கு எதிராக முழு நாட்டு மக்களும் ஒன்றிணைந்து மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்று  தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

தேசிய மக்கள் சக்தியின் பொதுக் கூட்டம் சாய்ந்தமருது கடற்கரையில், புதன்கிழமை மாலை (01) தேசிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினரும், கல்முனை தொகுதி அமைப்பாளருமான ஏ.ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அங்கு அவர் உரையாற்றுகையில்,

சிங்கள தலைவர்கள் சிங்கள இனவாதத்தை உருவாக்குகிறார்கள். அதேபோன்று முஸ்லிம் தலைவர்கள் முஸ்லிம் இனவாதத்தை உருவாக்குகிறார்கள்.  இவ்வாறு மக்களிடம் வந்து வாக்குகளை பெற்று இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஆட்சி நடத்துகின்றார்கள். மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதனை நாங்கள் மாற்ற வேண்டிய தேவை இல்லையா? இந்த பிரதேசங்களிலே  புதிய முஸ்லிம் தலைவர்களை உருவாக்க வேண்டும். உங்களை காட்டிக் கொடுக்காத பொதுமக்களுடைய சொத்துக்களை கொள்ளை அடிக்காத புதிய தலைவர்கள் தேவையில்லையா?  அவர்களை நாங்கள் அணைவரும் ஒன்றிணைந்து உருவாக்குவோம்.
 
தேர்தல் காலத்தில் அரிசி;பணம் கொடுக்கும்  அரசியல் நாம் செய்யவில்லை நாம் நாட்டை 
கட்டியெழுப்பக்கூடிய மாற்றத்தை உருவாக்க கூடிய வகையில் செயற்படுகிறோம். அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக இருக்க செயற்படுவோம்.பழைமைவாத அரசியலை இல்லாமல் செய்து புதிய அரசியல் பயணத்துடன் பயணிக்க திசைகாட்டியுடன் ஒன்று சேருங்கள் என்றும் குறிப்பிட்டார்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours