( வி.ரி. சகாதேவராஜா)
களுவாஞ்சிக்குடி
பிரதேச செயலக உத்தியோகத்தர்களின் ஒழுங்கமைப்பில் பல்வேறு மரநடுகை
திட்டங்கள் கிராம சேவகர் பிரிவுகளில் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
அந்த வகையில் முன்பிள்ளைபருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி அருந்ததி சிவரெத்தினம், விவசாய மற்றும்
கைத்தொழில் பிரிவு உத்தியோகத்தர்களின்
ஒழுங்கமைப்பில்
ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வுகளானது எருவில் பாரதிபுரம் முன்பள்ளி பாடசாலை
வளாகம் மற்றும் களுதாவளை பொருளாதார மத்திய நிலையம் ஆகிய இடங்களில்
நடைபெற்றது.
பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் சிரமதானம் இடம்பெற்றது.



Post A Comment:
0 comments so far,add yours