இ.சுதாகரன்
சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையால் வறுமைக்கோட்டிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களின் நலன் கருதி மாதந்தோறும் முன்னெடுத்துவருகின்ற
மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் எட்டாவது பாடசாலைச் செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்தில் இருக்கும் கற்சேனை அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் அதன் முதல்வர் திருவாளர் K.சிறிதரன் தலைமையில் நேற்றைய தினம் இடம் பெற்றது.
இம் மாதத்திற்கான திட்டத்தில் மட்/கற்சேனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை தெரிவுசெய்யப்பட்டு வறுமைக்கோட்டிற்குட்பட்ட சுமார் 40 மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.
மகப்பேற்று வைத்திய நிபுணர் வைத்திய கலாநிதி தவராஜா சுஹாஜனனின் நிதி அனுசரணையில் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டமானது முன்னெடுக்கப்படும் நிலையில்
பேரவையின் பிரதிநிதிகளாகவும் வளவாளர்களாகவும் கலந்து கொண்ட ஊவா வெஸ்ஸவல பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் சு.பிரதீபன் ,கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி T.விவேகானந்தராஜா TATTA நிறுவன திருகோணமலை மாவட்ட முகாமையாளர் கி.பத்மநாதன் ஆகியோர்களினால் அமைப்பினுடைய குறிக்கோள், நோக்கம் ,இலக்கு ,ஆளுமை தொடர்பான மாணவர்களுக்கேற்ற மனவெழுச்சிக் கருத்துக்களும் பெற்றோர்களுக்கேற்ற வழிகாட்டற் கருத்துக்களும் வழங்கப்பட்டன.
இதன் போது பாடசாலை அதிபர், பிரதி அதிபர், பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கலந்து கொண்ட பேரவை அங்கத்தவர்கள் அனைவராலும் மாணவர்களுக்கான பாதணிகள் வழங்கப்பட்டன.
இறுதியாக திட்ட இணைப்பாளர் திருவாளர் அ.சித்தாத்தனின் நன்றியுரையுடன் பாடசாலைகளுக்கான எட்டாவது திட்டம் இனிதே நிறைவுற்றது.
சிவானந்தா கல்வி மேம்பாட்டுப் பேரவையின் மகிழ்ச்சிகர மாணவர் பயணத் திட்டத்தின் ஒன்பதாவது செயற்பாடு மண்முனை மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்/ மாவடி முன்மாரி அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் சித்திரை மாதம் 29/04/2023) சனிக்கிழமை இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


.jpeg)


Post A Comment:
0 comments so far,add yours