சிறப்பாக நடைபெற்ற இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஆக்கத்திறன் போட்டிகள்.

 நாவிதன்வெளி பிரதேச அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது- 2022 ஆம் ஆண்டிற்கான பிரதேச மட்ட போட்டிகள் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர்களின் நெறிப்படுத்தலுக்கு அமைவாக நாவிதன்வெளி கலாசார மத்திய நிலையத்தில்  நடைபெற்றது 

இந்நிகழ்வில்  அறநெறிப்பாடசாலை மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு பேச்சு,நடனம்,நாடகம்,பண்ணிசை,நீதிநூல்ஒப்புவித்தல்,கதாப்பிரசங்கம்,வில்லுப்பட்டு  போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு  ஆக்கத்திறனை வெளிப்படுத்தினர் இதில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள்,அறநெறிப்பாடசாலை ஆசிரியர்கள்,பெற்றொர்கள் என பலரும் வருகை தந்தியிருந்தனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours