(வி.ரி.சகாதேவராஜா)
கடந்த சில நாட்களாக திருக்கோவில் மயான பிரதேசத்தில் கடல் அரிப்பு மிகவும் மோசமான நிலையில் காணப்படுகிறது.
அதன் காரணமாக அங்கிருந்த கல்லறைகள் சில கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு இருக்கின்றன .
மயானப்பிரதேசமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடர்பாக திருக்கோவில் உதவி பிரதேச செயலாளர் கந்தவனம் சதிசேகரனிடம் கேட்டபோது.
மயானப்பகுதி
வழமை போல கடல் அரிப்புக்கு உள்ளாகி வருகின்றது உண்மை . கரையோர பாதுகாப்பு
திணைக்களத்தினர் அங்கு கல் போடுவதற்கான ஏற்பாடுகளை செய்து
இருக்கின்றார்கள். என்றார்.




Post A Comment:
0 comments so far,add yours