கல்முனை ஆதார வைத்தியசாலையில் நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம், என்பியல் விடுதி மற்றும் என்பியல் சத்திர சிகிச்சை கூட பிரிவுகள் புதிதாக திறக்கப்பட்டு பொது மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.
திறந்து வைக்கப்பட்ட நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம் இலங்கையில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள ஒரு பிரிவு என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒரு விடயமாகும்.
இந்த பிரிவானது வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா முரளீஸ்வரனின் ஆலோசனைப்படி பிரதி பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதனின் வழிகாட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
*இப்பிரிவானது பின்வரும் சேவைகளை பொதுமக்களுகாக வழங்கவுள்ளது.*
* நோயாளர் பாதுகாப்பு கலாச்சாரம்
* நோயாளர் மற்றும் அவரது குடும்பத்தினரின் நோய் நிலை பற்றிய ஈடுபாடு மற்றும் ஆலோசனைகள்
* நோயாளர் சுகாதார தகவல்கள்
* நோயாளர்களின் மனகுறைகளை நிர்வகித்தல்
* நன்கொடையாளர் பாராட்டுகளை ஏற்பாடு செய்தல்
* நோயாளர்களுக்கான உதவியாளர் (by stander) ஏற்பாடு மற்றும் அவர்களுக்கான பயிற்சிகள்
* முரண்பாடுகளை தவிர்க்கும் செயறன்முறைகள்
* வைத்தியசாலை நடைமுறைகள்










Post A Comment:
0 comments so far,add yours