( வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப்
பிரசித்திபெற்ற கதிர்காம ஆடிவேல் விழாவிற்குச் செல்லும்
பாதயாத்திரிகர்களுக்கான காட்டுப்பாதை இன்று (27) செவ்வாய்க்கிழமையுடன்
மூடப்படும் .
குறித்த காட்டுப்பாதை கடந்த ( 12) திங்கட்கிழமை காலை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் சம்பிரதாய பூர்வமாக திறக்கப்பட்டது..
கடந்த 15 தினங்களில் சுமார் 45 ஆயிரம் அடியார்கள் பயணித்திருக்கலாம் என கூறப்படுகிறது.
கதிர்காமம் முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுன் 19ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஜுலை மாதம் 4 திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
அதேவேளை, உகந்தை மலை முருகனா லயத்தின் வருடாந்த ஆடிவேல் விழா
உற்சவம் ஜுலை 18ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி
தீர்த்தோற்சவத்துடன் நிறைவடையவிருப்பது தெரிந்ததே.
Post A Comment:
0 comments so far,add yours