சாய்ந்தமருது ஜும்ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்ற ஹஜ்ஜுப்பெருநாள் தொழுகை


(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை இன்று காலை 7மணிக்கு இடம்பெற்றது.

ஆண்கள் மற்றும் பெண்கள் எனஒரே தடவையில், குறிக்கப்பட்ட உரிய நேரத்தில் பள்ளிவாசலின் பேஷ் இமாம் எம்.ஐ. ஆதம்பாவா ரஷாதியினால் தொழுகையும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. 

ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர் சபையின் தலைவர் ஏ. ஹிபத்துல் கரீம், செயலாளர் ஐ.எல்.எம். மன்சூர், பொருளாளர் ஏ. சலீம் உட்பட நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள்,க்ஷ பெண்கள் உட்பட சிறுவர்களும் தொழுகையில் கலந்து கொண்டனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours