( அஸ்ஹர்  இப்றாஹிம்)


கல்முனை கார்மல் பற்றிமாக் கல்லூரியில் கற்பித்து  வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற ஆசிரியர்களை பாராட்டி கெளரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு அண்மையில் கல்லூரி திறந்தவெளியரங்கில் கல்லூரி அதிபர் அருட் சகோதரர்  சந்தியாகு தலைமையில் இடம்பெற்றது.

 ஆங்கில ஆசிரியைகளான திருமதி .அமிலா, திருமதி.தர்ஷிக்கா,திருமதி தர்ஷினி, கணித  பாட ஆசிரியை திருமதி. தணுரேகா மற்றும்  தகவல்  தொழில்நுட்ப  ஆசிரியை திருமதி். ஷர்மிலா ஆகியோர் இவ்வாறு பாராட்டி கெளரவிக்கப்பட்டவர்களாவார்கள். 
இந் நிகழ்வில் பிரதி அதிபர்கள், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours