பொலன்னறுவை - கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற தனியார் பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து நேற்றிரவு (09.07.2023) இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த பேருந்தில் சுமார் 70 பேர் வரை பயணித்துள்ள நிலையில்,பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலிருந்த ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஆற்றில் விழுந்து விபத்திற்குள்ளான பேருந்து வெளியே எடுக்கப்பட்டு போக்குவரத்து சீராக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours