எஸ்.சபேசன்

துறைநீலாவணை முத்துமாரியம்மன் ஆலய திருச்சடங்கு  இன்று சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்படுவதனை  முன்னிட்டு மடை எழுந்தருளும் நிகழ்வு இன்று காலை  இடம்பெற்றது.


கண்ணகியம்மன் ஆலயத்தில் மடை எழுந்தருளப்ப பண்ணி அங்கிருந்து முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு எடுத்துவரப்பட்ட நிகழ்வு மிகவும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கதவு திறக்கப்பட இருக்கின்றது


ஆலய உற்சவம் 01 ஆம் திகதி சனிக்கிழமை மாலை திருக்கதவு திறக்கப்பட்டு விசேடபூசைகள் ஆரம்பமாகும் 3 ஆம் திகதி திங்கட்கிழமை அம்மன் ஊர்வலம் இடம்பெறும் மறுநாள் 4 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை துரைவந்தியமேட்டுக்கிராமத்திற்கு அம்மன் ஊர்வலம் எடுத்துச்செல்லப்படும் 5 ஆம் திகதி புதன்கிழமை அம்மன் கன்னிக்கால்வெட்டும் நிகம்வு இடம்பெறும். 6 ஆம் திகதி மாலை அம்மன் சமுத்திரநீராடலுக்காக அம்பாரைமாவட்டத்தின் எல்லையில் உள்ள பெரியநீலாவணைக் கிராமத்திற்குச் சென்று பெரியநீலாவணையில் உள்ள விஷ்ணு ஆலயம் பேச்சம்மன் ஆலயம் பெரியதம்பிரான் ஆலயங்களுக்குச் சென்று விஷேட பூசைகள் நடாத்தப்பட்டு பின்னர் கடலுக்குச்சென்று விசேடபூசைசெய்து அம்மன் தெய்வங்களுக்கு சாட்டையடி வழங்கி நீராடி அன்றிரவு நோப்புநூல் கட்டப்பட்டு 7 ஆம் திகதி அதிகாலை வெள்ளிக்கிழமை தீமிதிப்பு வைபவம் இடம்பெறும்.

ஆலயத்தின் பூசைகளை சிவசிறி கு.நல்லராசா குருக்களின் தலைமையில் உதவிக்குருக்கள் சிவசிறி ந.கு.பவித்திரன்  ஆகியோர்களினால் இடம்பெற இருப்பதுடன் உற்சவத்திற்கான ஒழுங்குகளை ஆலயத்தலைவர் க.அழகரெத்தினம் மற்றும் செயலாளர் எஸ்.குகன் பொருளாளர் சா.ரமேஸ் உட்பட நிருவாகசபையினர் ஆலய உற்சவத்திற்கான ஏற்பாடுகளைச்செய்து வருகின்றனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours