எஸ்.சபேசன்
தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு நாவிதன்வெளி பிரதேசசபையின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி கோட்டத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி பயிலும் தரம் 3 தொடக்கம் தரம் 10 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு கட்டுரை கவிதை சித்திரப்போட்டிகள் 11 ஆம்திகதி புதன்கிழமை பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதன் தலைமையில் இடம்பெற்றது.
பதில் நூலகர் ஏ.சி.முகமட் அலி அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதேசசபையின் பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் பா.சதீஸ்கரன் உள்ளுராட்சி உதவியாளர் எஸ்.கருணாகரன் நிதி உதவியாளர் எம்.ரகுநந்தன் முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எஸ்.திவாகரன் தொழில்நுட்ப உத்தியோகத்தர் எஸ்.ரஞ்சித்குமார் உட்பட பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours