வயல் பிரதேசத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் இன்று(29) மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தன் வெளிக் கண்டம் ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் குறித்த சடலம் காணப்பட்டது.
வயலுக்கு கடந்த 03 நாட்களாக சென்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் வீடு திரும்பவில்லை என உறவினர் தெரிவிக்கின்ற நிலையில் மேற்குறித்த வயல் பிரதேசத்தில் சடலம் ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்துள்ளதை அடுத்து உறவினரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் காரைதீவு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் தபால் வீதி குறுமன்வெளி களுவாஞ்சிக்குடி பிரதேசத்தை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சதீஸ்கரன் (40 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours