(சுமன்)



வாகரை கண்டலடி துயிலுமில்லத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் முகமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இன்றைய தினம் களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

மாவீரர் தினத்தையொட்டி வாகரை கண்டலடி துயிலுமில்லத்தில் பிரதேச இளைஞர்களினால் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் இனந்தெரியாத நபர்களால் துயிலுமில்லம் சேதமாக்கப்பட்டது. இதனையடுத்து துரிதமாகச் செயற்பட்ட ஏற்பாட்டுக் குழுவினர் துயிலுமில்லத்தை மீண்டும் புதுப்பித்திருந்தனர்.

சேதமாக்கப்பட்ட விடயத்தினை பாராளுமன்ற உறுப்பினர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிக்கையிட்டதுடன், தமது கண்டனத்தினையும் வெளிப்படுத்தி இருந்தார்.

இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் மேற்படி துயிலுமில்லத்தின் நிலைமைகள் தொடர்பில் ஆராயும் முகமாக விஜயம் மேற்கொண்டிருந்ததுடன், இளைஞர்களுடனும் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours