(எம்.ஏ.றமீஸ்)

சிறுவர் மகளிர் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் செயற்பட்டு வரும்  முதியோர் தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் மூலம் வயோதிபர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்களைக் கையளிக்கும் நிகழ்வு பொத்துவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
பிரதேச செயலாளர் சட்டத்தரணி எம்.ஐ.பிர்னாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின்போது பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 28 சிரேஷ்ட பிரஜைகளுக்கு இவ்வுதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பொத்துவில் பிரதேசத்தில் உள்ள வயோதிப நோயாளிகள், நீண்ட கால படுக்கையில் உள்ள முதியோர்கள், வருமானமற்ற சிரேஷ்ட பிரஜைகள் போன்ற தெரிவு செய்யப்பட்ட முதியோருக்கு இவ்வுதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன்போது தெரிவு செய்யப்பட்ட முதியோர்களுக்கென கட்டில் மெத்தைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கான உதவிப் பொருட்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் எம்.இராமக்குட்டி, முதியோர் மேம்பாட்டு உத்தியோகத்தர் இசட்.பர்ஸான், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.ஏ.சனூசியா உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours