( வி.ரி.சகாதேவராஜா)
பொதிகளில் மிளகாய்ச் செய்கை செய்யும் முறைமையை ஊக்குவிக்கும் வகையில் காரைதீவு விவசாய போதனாசிரியர் பிரிவில்
கூட்டு விளம்பர நிகழ்வு நேற்று இடம் பெற்றது.
காரைதீவு
விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் தலைமையில் தொழில்நுட்ப
உதவியாளர் திருமதி எஸ்.நிலக்க்ஷியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு
பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலய உதவி விவசாய பணிப்பாளர் திருமதி
அழகுமலர் ரவீந்திரன் , கௌரவ அதிதியாக விவசாய போதனாசிரியர் ஜே.எம் . பாஸில்
ஆகியோர் கலந்து விவசாயிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினார்கள்.
விவசாய போதனாசிரியர் திருமதி சஜிகலா ரகுநந்தன் பேசுகையில்..
பொதிப்
பயிர் செய்கையானது நிலம் அற்றவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். எமது
பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளம் கடும் வறட்சி என்பவற்றால் மாறி மாறி வரும்
அனர்த்தங்களால் பயிர் செய்கை பாதிக்கப்படுகிறது. இத்தகைய பாதிப்பை
குறைக்கும் வகையிலும் நிலமில்லாத பிரச்சினை தீர்க்கும் வகையிலும் இப்
பொதிப் பயிர் செய்கை அறிமுகப்படுத்தப்பட்டது.
குறிப்பாக நகர மாடி வீடுகளுக்கு ஏற்ற முறையாகவுமுள்ளது.
எனவே விவசாயிகள் இத்தகைய புதிய முறைகளையும் பின்பற்றி வாழ்வை வளமாக்கிக்கொள்ள வேண்டும் என்றார்.
Post A Comment:
0 comments so far,add yours