(எஸ்.அஷ்ரப்கான்)
மதுசாரத்தின்
வரி, விலை, பெற்றுக் கொள்ளக்கூடிய தன்மை மற்றும் சட்டவிரோதமான
மதுசாரத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு தெளிவூட்டும்
கலந்துரையாடல் சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் நேற்று மாலை (24)
இடம்பெற்றது.
சிலோன் மீடியா போரத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
இங்கு
பிரதம வாளராக மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் சிரேஷ்ட
நிகழ்ச்சி அதிகாரி ஏ.சி.றஹீம் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன்
மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் கிழக்கு மாகாண
ஒருங்கிணைப்பாளரும்; அகில இலங்கை வை. எம்.எம்.ஏ.பேரவையின் தேசிய உப
தலைவர்களில் ஒருவருமான எஸ்.தஸ்தகீர் உட்பட இளைஞர் பயிற்சி நிலையத்தின்
பொறுப் பதிகாரி எம்.ஏ.ஹமீட், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத்
ஏ.மஜீட் உட்பட ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு பிரதம வளவாளர் ஏ.சி.ரஹீம் உரையாற்றும்போது,
சட்டவிரோதமான
மதுசாரத்தினால் நோய்வாய்ப் பட்டவர்களின் கணக்குகளை சேகரிப்பதற்கான முறையான
நெறிமுறை எமது நாட்டின் சுகாதாரப் பிரிவில் இல்லை. இவ்வாறான நிலைமையிலேயே
சமூகத்தில் பல வதந்திகள் செய்திகளாக பரப்பப்படுகின்றது. அத்தோடு எமது
சமீபகால ஆய்வுக்கேற்ப சுமார் பத்து வீதமானவர்களே சட்டவிரோத மதுசாரத்தை
பாவனை செய்கின்றனர் என தெரியவந்துள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours