(எம்.எம்.றம்ஸீன்)

உலக வங்கியின் நிதிப் பங்களிப்புடனான LDSP திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட மூதூர் கலாசார மண்டபத்தின் புனர்நிர்மான வேலைகள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதேச சபை செயலாளர் வி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண கெளரவ ஆளுனர் செந்தில் தொண்டமான் அவர்களினால் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக உள்ளூராட்சி திணைக்களத்தின் பிரதிநிதிகளும் மற்றும் முதூர் பிரதேசத்த அரச நிறுவனங்களின் தலைவர்களும் பங்கேற்றப்பு செய்தனர்.

மிக நீண்டகாலமாக மக்கள் பயன்பாடற்று இருந்த மூதூர் கலாசார மண்டபம் மக்கள் பயன்படுத்தும் விதமாகவும், பிரதேச சபைக்கு வருமானமீட்டும் தளமாகவும் தொழிற்படக்கூடும். 
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours