பாடசாலையிலிருந்து வீடு செல்லும் வழியில் கண்டெடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்களையும், பணம் அடங்கிய கைப்பையினையும் உரியவர்களிடம் கிடைக்கும் வகையில் மீகலேவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மீகலேவ மகாவலி தேசிய பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் நிசுறு யுவனிகா, சந்துணி நிமல்கா ஆகிய இரு மாணவிகளின் இவ்வாறான மனிதநேய செயற்பாட்டை பொலீஸ் நிலைய உத்தியோஸ்தர்கள், பிரதேசவாசிகள் பாராட்டியுள்ளதோடு பாடசாலை அதிபர் மங்கலிகா வீரசேகர இந்த மாணவிகளின் முன்மாதிரியான செயற்பாடுகளை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்றினையும் ஏற்பாடு செய்திருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours