(சுமன்)


மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர் எந்திரி என். சிவலிங்கம் அவர்கள் புளியந்தீவு ரிதம் சனசமூக நிலையத்திற்கு விஜயம் மேற்கொண்டதுடன் மேற்படி சனசமூக நிலையத்தினால் செயற்படுத்தப்பட்டு வரும் வட்டார வாசிப்பு நிலையத்தினை சனசமூக நிலையத்தின் புதிய கட்டிடத்தினுள் மீள ஆரம்பித்து வைத்தார்.

கடந்த மாநகரசபை ஆட்சியின் போது முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன் அவர்களினால் பாதீட்டு நிதி ஒதுக்கீடு மூலம் சனசமூக நிலைய கட்டிடம் அமைத்துக் கொடுக்கப்பட்டது. மேற்படி கட்டிடத்தில் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய மேலதிக வேலைத்திட்டங்கள் குறித்து சனசமூக நிலையத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய அது தொடர்பில் ஆராயும் முகமாகவும், வட்டார வாசிப்பு நிலையத்தினை மீள ஆரம்பித்து வைக்கும் முகமாகவும் மாநகர ஆணையாளரின் இன்றைய விஜயம் அமைந்திருந்தது.

ரிதம் சனசமூக நிலையத்தின் தலைவர் கிழக்குப் பல்கலைக்கழக முன்னாள் பிரதி உபவேந்தர் பேராசிரியர் வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இதில் முன்னாள் மாநகரசபை உறுப்பினர் அந்தோனி கிருரஜன், சனசமூக நிலையம் செயலாளர் மே.துதிகரன், பொருளாளர் தி.கிசாந்தன் உள்ளிட்ட உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது சனசமூக நிலையத்தின் செயற்பாடுகள், எதிர்கால செயற்பாடுகள் குறித்து மாநகர ஆணையாளருடன் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours