(எம்.எம்.றம்ஸீன்)
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் 2023 ஆம் ஆண்டுக்கான செளபாக்கியா வீடமைப்பு திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி வங்கிச் சங்க சமூக அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது - 12, 17 ஆம் பிரிவுக்குட்பட்ட 02 பயனாளிகளுக்கான வீடுகள் கையளிக்கின்ற நிகழ்வும் , 02 பயனாளிகளுக்கு தனவந்தர் மூலமாக இலவச குடிநீர் விநியோகமும் புதன்கிழமை இடம்பெற்றது.
சமுர்த்தி சமூக அபிவிருத்தி உதவியாளர் யூ.எல்.ஜஃபரின் நெறிப்படுத்தலிலும், சமுர்த்தி தலைமைப் பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.சீ.ஏ. நஜீமின் தலைமையிலும் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசிக்,
அதிதிகளாக உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.முவஃபிகா, சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் றியாத் ஏ மஜீத் , சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஐ.எல்.ஹிதாயா , கருத்திட்ட முகாமையாளர் எஸ்.றிபாயா,
Post A Comment:
0 comments so far,add yours