(எம்.எம்.றம்ஸீன்)

காரைதீவு கல்விக் கோட்டத்திற்குட்பட்ட  , மாளிகைக்காடு சபீனா முஸ்லிம் வித்தியாலயத்தில்  நடைபெற்ற காலை ஆராதனைக் கூட்டத்தில், அண்மையில் காரைதீவு கோட்டக் கல்விப் பணிப்பாளராக கடமையேற்றுள்ள திரு. ஏ சஞ்ஜீவன் அவர்களை வரவேற்று அறிமுகம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கோட்டக்கல்விப் பணிப்பாளர் மாணவர்  ஒழுக்கம், கல்வியின் முக்கியத்தும் பற்றி மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்கள். 
மேலும் கோட்ட, வலய மட்ட ரீதியிலான இணைப்பாடவிதான செயற்பாடுகளில் திறமை காட்டிய பாடசாலை மாணவர்கள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் அவர்களால் சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் சித்திரம், ஆக்கத்திறன்களின் கண்காட்சி கோட்டக் கல்விப் பணிப்பாளர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours