இலங்கையில் மழையுடன் கூடிய காலநிலை தீவிரமடைந்துள்ள நிலையில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழைவீழ்ச்சி தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், கிழக்கு, ஊவா மற்றும் தென் மாகாணங்கள், இரத்தினபுரி, களுத்துறை, நுவரெலியா, மாத்தளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று முன்னறிவிப்பு சுட்டிக்காட்டுகிறது. இதனால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours