(அஸ்ஹர் இப்றாஹிம்)

ஓட்டமாவடி  வளர்பிறை விளையாட்டுக்கழக  கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்ட அணியினருக்கான விசேட கூட்டமும் விளையாட்டு  உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் கழக தலைவர் ஏ.எல்.எம்.ஏ.காதர் தலைமையில்  நடைபெற்றது. 

இந்நிகழ்வில் கழகத்தின் ஆலோசகர் எம்.ஏ.ஸி.ஜிப்ரீ கரீம் (அதிபர்) , கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சறூக் ஜான் மற்றும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர். 

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கிராமசேவை அதிகாரியும் , ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான  எம்.எம்.எம்.ஹனீபா  கலந்து சிறப்பித்தார். 
பிரதம அதிதி  கழகத்திற்காக தொடர்ந்து செய்து வரும் சேவைக்காக கழகத்தினால் நினைவுச்சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.








Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours