(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஓட்டமாவடி வளர்பிறை விளையாட்டுக்கழக கிரிக்கெட் மற்றும் உதைப்பந்தாட்ட அணியினருக்கான விசேட கூட்டமும் விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு நிகழ்வும் கழக தலைவர் ஏ.எல்.எம்.ஏ.காதர் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கழகத்தின் ஆலோசகர் எம்.ஏ.ஸி.ஜிப்ரீ கரீம் (அதிபர்) , கழகத்தின் சிரேஷ்ட உறுப்பினர் சறூக் ஜான் மற்றும் அனைத்து நிர்வாக உறுப்பினர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஓய்வுபெற்ற கிராமசேவை அதிகாரியும் , ஓட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினருமான எம்.எம்.எம்.ஹனீபா கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours