கல்முனை வடக்கு பிரதேசத்தில் சிறந்த சமூக சேவையாளராக கலா பூஷணம் பல்துறை வித்தகர்  ஓய்வு நிலை அதிபர் கா. சந்திரலிங்கம் அவர்கள் தெரிவுசெய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டார்

முதியோர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகங்கள் அனைத்திலும் இருந்து சிறந்த கலைஞர்கள் சிறந்த சமூக சேவையாளர்கள் மற்றும் கவிதை பாடல்கள் போன்றவற்றில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்கள் ஆகியோரை தெரிவு செய்து அவர்களுக்கான பரிசுகளும் பாராட்டுக்களையும் விருதுகளையும் வழங்கி கௌரவித்தது.

கிழக்கு மாகாண ஆளுநர் கௌரவ செந்தில் தொண்டமான் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்நிகழ்வு கிழக்கு மாகாண சமூக சேவை திணைக்களத்தின் பணிப்பாளர் அவர்கள் தலைமையில் காரைதீவு கலாசார மண்டபத்தில்  இடம் பெற்றது. 

ஆளுநர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தென் ஆப்பிரிக்க இலங்கைக்கான  உயர்ஸ்தானிகர் கலந்து  கொண்டமை சிறப்புடையது.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours