( வி.ரி.சகாதேவராஜா) 


 இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழா கிழக்கு மாகாணத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

 மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் எதிர்வரும் நான்காம் தேதி மூன்று மணிக்கு நடைபெற இருக்கின்ற இந்த சுதந்திர தின விழா தொடர்பான முன்னோடி கூட்டம் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

மட்டக்களப்பில் உள்ள ஆளுநர் சுற்றுலா விடுதியில் இந்த கூட்டம் இடம்பெற்றது.

 கூட்டத்தின் பின்னர் மட்டக்களப்பு வெபர் அரங்கு கல்லடி பாலம் உள்ளிட்ட இடங்களையும் ஆளுநர் தலைமையிலான குழு பார்வையிட்டது.

மட்டக்களப்பு அரசாங்க அதிபர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

சகல மாகாண செயலாளர்களும் கல்வி புலத்தினரும் கலந்து கொண்டார்கள்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours