( காரைதீவு சகா)
காரைதீவு
பிரதேசத்தில் மிகவும் தாழ்நிலை பகுதியில் இருக்கும் குளவெளி வீடமைப்பு
தொகுதியிலுள்ள வெள்ளப்பாதிப்பு மக்களுக்கு ஒஸ்கார் அமைப்பு நேற்று ஒரு
தொகுதி சமைத்த உணவை வழங்கி வைத்தது.
அவுஸ்திரேலியாவில்
வாழும் காரைதீவைச்சேர்ந்த சமூக ஆர்வலர்களின் நிதி உதவியைக் கொண்டு
காரைதீவு இளைஞர்கள் அந்த மனிதாபிமான பணியில் ஈடுபட்டார்கள்.
ஒஸ்கார்
சார்பில் சமூக செயற்பாட்டாளர் கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா
கலந்துகொண்டு அதனை வழங்கி வைத்தார். மூன்றடி வெள்ளத்தில் நின்று இளைஞர்கள்
இதனை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours