இ.சுதாகரன்
துறைநீலாவணை பழையமாணவர்களின் ஏற்பாட்டில் வறுமைக்கோட்டின் கீழ்வாழும் மாணவர்களுக்கு வீரமுனை காயத்திரி அறக்கட்டளை அமைப்பினரினால் புத்தகப்பைகள் வழங்கிவைக்கும் நிகழ்வு தொழில்நுட்ப உத்தியோகத்தர் வ.மதிகேகசன் தலைமையில் வியாழக்கிழமை இடம்பெற்றது.இவ் அமைப்பினரிடம் துறைநீலாவணை பழையமாணவர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இவ் உதவி வழங்கிவைக்கப்பட்டது
இந்நிகழ்வில் சோ.குகதாசன் ஏ.விஜிதரன்,ஜீ.குணரஞ்சன் சந்திரகுமார் இன்பராசா தொழில்நுட்ப உத்தியோகத்தர் இ.சுதர்சன் இ.சுதாகரன் பு.சக்தன் ஆகியோருடன் துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் அதிபர் தி.ஈஸ்வரன் பிரதி அதிபர் இ.லிங்கநாதன் மற்றும் காயத்திரி அறக்கட்டளை நிறுவனத்தின் பிரதிநிதி. ச.யுனேசா ஆகியோர் கலந்துகொண்டு இவ் உதவிகளை வழங்கிவைத்திருந்தனர்.
இவ் அமைப்பினரிடம் துறைநீலாவணை பழையமாணவர்கள் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours