(எஸ்.அஷ்ரப்கான்)

நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  சவளக்கடை பிரதேசத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழுள்ள தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (20.01.2024) சவளக்கடையில் இடம் பெற்றது.

தேசிய சிறுவர்பாதுகாப்பு அதிகாரசபையின் மாவட்ட சமுக உளநல உத்தியோகத்தர் யூ.எல். அசார்டீனின் ஏற்பாட்டில் இடம்பெற்ற  இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வீ. ஜெகதீசன்  கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கிவைத்தார்.
இங்கு மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours