(உமர் அறபாத் - ஏறாவூர் )

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அணுசரனையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்துள்ள பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு இன்று காலை  மட்டக்களப்பு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இவ்விசேட செயலமர்வில் சிரேஸ்ட சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான திருமதி.மயூரி ஜனன் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச் சட்டம் தொடர்பாகவும் விளக்கமளித்தார்.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய செய்தியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டு நிகழ்நிலைக் காப்புச்சட்டம் குறித்த தெளிவினை பெற்றுக்கொண்டனர்



.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours