இ.சுதாகரன்


மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பொங்கல் விழா நிகழ்வு துறைநீலாவணை மண்ணில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது

மண்முனை தென் எருவில்பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகமும் துறைநீலாவணைக் கிராமப் பொது மக்கள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து நடாத்திய பிரதேச பொங்கல் விழா நிகழ்வு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம் அவர்களின் தலைமையில் துறைநீலாவணை மண்ணில் வெள்ளிக்கிழமை(2) காலை 8.30 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் திருமதி சத்தியகெளரி தரணிதரன் மற்றும் நிருவாக உத்தியோகத்தர் .வே. தவேந்திரன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள், கலைஞர்கள்,பிரதேச செயலக நிருவாக எல்லைக்குட்பட்ட கிராமங்களின்  பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வானது துறைநீலாவணை தில்லையம்பலப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி கதிர் எடுத்தல் நிகழ்வினைத் தொடர்ந்து இந்துக் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்களுக்கு அமைவாக பவனி ஊர்வலம் கண்ணகி அம்மன் ஆலய முன்றலினை சென்றடைந்து பொங்கல் நிகழ்வுக்கான பானையில் புத்தரிசிடல் நிகழ்வினைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மட்டுமல்லாது பிரதேச பொது அமைப்புக்களின் பண்பாட்டு விழுமியங்களை பறை சாற்றுகின்ற நிகழ்வுகளும் கண்ணகி கலை அரங்கில் இடம்பெற்றதுடன் துறையூர் கண்ணகைத்தாயின் புகழ்பாடும் இறுவட்டும் வெளியீடு செய்யப்பட்டதுடன் துறைநீலாவணை யுனைட்டெட் விளையாட்டுக்கழகத்தினரால் பிரதேச செயலாளர் மற்றும் உதவிப்பிரதேச செயலாளர் இருவரும்   வாழ்த்துப்பா வழங்கி , பொன்னாடை அணிவித்தும் கெளரவிக்கப்பட்டன ர்.












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours