மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் விற்பனைக்காக கோழிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த டிப்பர் ரக லொறி ஒன்று கல்லாறு பாலத்தில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் லொறிக்கு பலத்த சேதமேற்பட்டுள்ளதுன் கோழிகளும் வீதிகளில் சிதறி காணப்பட்டது.
கோழி லொறியை செலுத்திக்கொண்டிருந்த சாரதியால் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமையே இந்த விபத்துக்கு காரணம் என சொல்லப்படுவதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post A Comment:
0 comments so far,add yours