(எஸ்.அஷ்ரப்கான்)
அம்பாறை
மாவட்ட செயலகத்தின் நூகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினால் சமூக
மட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நிந்தவூர் மாவட்ட
தொழிற்பயிற்சி அதிகார சபையில் பயிற்சி நெறியினை மேற்கொள்ளும்
பயிலுனர்களுக்கு நூகர்வோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி, மாவட்ட தொழிற்பயிற்சி
நிலையத்தின் பொறுப்பதிகாரி எஸ்.அப்துல் நாஸர் தலைமையில் அண்மையில்
இடம்பெற்றது.
இதன் போது, பாவனையாளர் உரிமைகள்,
பொறுப்புகள்,சட்டங்கள்,
பாதுகாப்பு மற்றும் பொருட்கள் சேவைகளின் போது கவனிக்க வேண்டிய முக்கியமான
விடயங்கள் மற்றும் தற்போதைய சந்தையில் பொருட்களின் அரசாங்க கட்டுப்பாட்டு
விலை மற்றும் அதிகார சபையின் சட்ட திட்டங்கள் முறைப்பாடு செய்வது
சம்மந்தமாக பயிலுனர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours