( வி.ரி. சகாதேவராஜா)
ஜனாதிபதி
சூழலியல் வெள்ளி விருதை வென்ற கல்முனை ஆதார வைத்தியசாலையின் பாராட்டு விழா
நேற்று (4) வெள்ளிக்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் பணிப்பாளர்
டாக்டர் ரங்க சந்ரசேன தலைமையில் நடைபெற்றது.
பிரதம
அதிதியாக. மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளரும்
,கிழக்கு மாகாண பதில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளரும், கல்முனை ஆதார
வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய
அத்தியட்சகருமான வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் கலந்து சிறப்பித்தார்.
இந்
நிகழ்வில் ஆன்மீக அதிதிகளாக சிவஸ்ரீ கோபாலநிரோஷன், பற்றிமா தேசிய கல்லூரி
அதிபர் அருட்சகோதரர்எஸ்.இ. ரெஜினோல்ட் கலந்து சிறப்பித்தனர்.
வைத்தியசாலையின்
பிரதிப் பணிப்பாளர் டாக்டர் தாஹிறா சபியுடீன்,பிரதிப் பணிப்பாளர் டாக்டர்
எஸ்.இராஜேந்திரன்,கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் சுகாதார
வைத்திய அதிகாரி டாக்டர் ஜே.மதன்( சாய்ந்தமருது ) டாக்டர் என்.ரமேஸ்(
கல்முனை வடக்கு), கணக்காளர் எம்.கேந்திரமூர்த்தி, சிரேஸ்ட ஊடகவியலாளர்
வித்தகர் விபுலமாமணி வி.ரி. சகாதேவராஜா நிகழ்வின் அனுசரணையாளர் சரவணாஸ்
உரிமையாளர் என்.பிரகலதன், கல்முனை நெற் பி.கேதீஸ் உள்ளிட்ட பல முக்கிய
பிரமுகர்கள் அதிதிகளாக கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதழ்களையும்
வழங்கி வைத்தனர்.
நோயாளர்
பாதுகாப்பு விருது மற்றும் ஜனாதிபதி சூழலியல் விருதைப் பெறுவதற்கு உதவிய
அனைத்து தரப்பினருக்கும் நினைவு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
வைத்தியசாலை ஊழியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இதன் போது
. வைத்தியசாலை வைத்திய
நிபுணர்கள், வைத்திய அதிகாரிகள் வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினர் மற்றும் ஏனைய
உத்தியோகத்தர்களும் மாணவர்களுக்கும் பங்குபற்றினர்.
Post A Comment:
0 comments so far,add yours